Featured Posts

Wednesday, June 3, 2015

இது ஜெயமோகனின் 'அறம்'



'அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்' என்று தவறு செய்யும் ஆட்சியாளர்களை கொன்று போடும் வல்லமை உடையது 'அறம்' என்று சிலப்பதிகாரத்தில் போற்றப்படுகிறது. திருவள்ளுவர் முப்பால்களில் முதல் பாலாக அறத்துப் பாலை வைத்தார். அறம் பாடுவது தமிழ் புலவர்களின் வலிமையான ஆயுதமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. அறிவை இழிவு படுத்தும் எவரையும் அறம் பாடி ஒழிக்கும் வல்லமையை தமிழ்ப் புலவர்கள் காலந்தோறும் கைகளில் வைத்திருந்தார்கள்.

இப்படிப்பட்ட அறத்தை ஒவ்வொரு கால கட்டத்திலும் இலக்கிய மேதைகள் அடையாளம் கண்டு சமூகத்துக்கு அறியத் தருகிறார்கள். அந்த வரிசையில் சில ஆண்டுகளுக்கு முன்பு சமகால இலக்கிய ஆளுமையான ஜெயமோகன், தன் வலைதளத்தில் 2011 ஜனவரியில் ‘அறம்’ என்ற சிறுகதையில் தொடங்கி வரிசையாக ஒரு ஒன்றரை மாதத்துக்குள் 12 (‘மெல்லிய நூல்’ என்ற சிறுகதையையும் சேர்த்தால் 13) சிறுகதைகளை எழுதி வெளியிட்டார்.

Saturday, November 8, 2014

வாய்ப்பு



ஜகத்திரள்  என்னும் மந்தையில் ஜகம் என்னும் ஒரு சந்தையில் தனித்துலா வரும் விந்தை தான் யார் இவன்... ? புரையோடிப் போன சமூகத்தில் பொரைக்காக ஓடிக் கொண்டிருக்கும் சாமானியன் நான். இந்த மரணம் நோக்கிய பயணத்தில் வயது ஏற ஏற ஓடும் வேகமும் கூடுவதை உணரமுடிகிறது.

அவ்வப்போது இளை பாற நேரம் கிடைக்கும் போதெல்லாம் சமூகத்தில் உள்ள குறைகளை ஆராய்வதிலேயே பொழுது போகிறது. குறை கண்டுபிடிப்பது படித்தவர்களுக்கு மிகவும் பிடித்த விஷயம்... ஏனெனில் அப்போது தான் தனது பண்டிதத்தனத்தை மற்றவரிடம்  காட்ட முடியும். அப்படி பொருளாதார அரசியலைப் பற்றி சிந்திக்கும் போது கன நேரத்தில் உருவான ஒரு சிந்தனையையே இங்கே பதிவு செய்திருக்கிறேன்.

சமூகத்தில் நிலவுகின்ற பொருளாதார இடைவெளிக்கும், ஏற்றத்  தாழ்விற்கும்,ஒருவனிடம் வசதி இருப்பதற்கும் இல்லாமல் போவதற்கும் முக்கிய காரணம் சூழ்நிலைகளும், வாய்ப்புகளும்  அன்றி வேறேதுமில்லை.

ஒருவனுக்குக் கிடைக்கப்படும் வாய்ப்புகளே பல நேரங்களில் ஒருவனின் வெற்றியையும் வாழ்க்கையின் இருப்பு நிலையையும் தீர்மானிக்கிறது.




இது பலரால் பல நேரங்களில் உணரப்படாத காரணத்தினாலே இங்கே வேறு ஒரு ஆட்டம் நடந்து கொண்டிருக்கிறது. ஏதேனும் ஒரு துறையில் முன்னேறப் போராடிக் கொண்டிருப்பவனுக்குக்  கிடைக்கும் வாய்ப்பு, சில நேரங்களில் வெற்றியைத்  தந்து அவனை ஒரு படி மேல உயர்த்திவைத்து அழகு பார்க்கிறது. 

இந்தப்  பிரச்சனையின் மையம் என்பது இங்கே தான் துவங்குகிறது, வெற்றி பெற்றவனை அடக்கம் தொற்றிக் கொள்வதற்குப் பதில் கர்வம் தொற்றிக் கொள்கிறது. அதுவரை கடந்து வந்த பாதையை மறந்து 'நான்' , இது என்னால் நிகழ்ந்தது என்பது போன்றத்  தாந்தோன்றித்  தனமான சிந்தனைகள் அவனுக்குள்ளே படரத்  துவங்குகிறது. அது அவனை வாய்ப்புக்காக போராடிக் கொண்டிருப்பவனையும் , வாய்ப்பு கிடைக்காதவனையும்  ஏளனமாகப் பார்க்க வைத்து விடுகிறது.

நான் உயர்ந்தவன், நீ தோற்றவன் அதனால்  என்னைவிடக்  கீழானவன் என்பது போன்ற கோணல் பார்வையுடன் அவன் உலகத்தை அணுகத்  தொடங்குகிறான்.





ஆழ்ந்து சிந்தித்தால் இதில் கர்வம் கொள்வதற்கோ  அலட்டிக் கொள்வதற்கோ ஒன்றும் இல்லை. நம்முடைய சூழ்நிலையும் சந்தர்ப்பமும் நம்மை ஒரு இடத்திலும், இன்னொருவனை வேறொரு இடத்திலும் அமர்த்துகிறது அவ்வளவே. இதில் ஒப்பீட்டுக்கு இடமில்லை.

எதார்த்தத்தில் வாய்ப்புக்  கிடைத்தவன் கிடைக் காதவனுக்கு கை கொடுத்து உதவ வேண்டும். ஆனால் இங்கே அப்படி ஒன்றும் நடப்பதாய் தெரியவில்லை, நடந்திருந்தால் இவ்வளவு வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் பொறாமைகளும் வந்திருக்காது என்பது என் வாதம்.

வாழ்க்கை என்பது ஆயிரம் கால் மண்டபம், ஒரே நாளில் யாரும் கட்டி  விட முடியாது என்ற பொன்மொழிக் கிணங்க நண்பர்கள், உறவுகள், பெற்றோர்கள், வழிகாட்டிகள், பின்புலம்,பணபலம் இவை போன்று நிறைய விஷயங்களை உள்ளடக்கியதே ஒருவனின் வாழ்க்கை நிலை.

இதை விடுத்து தலைமுறை தலைமுறையாய்  சேர்த்த சொத்தில் தன்  வாழ்க்கையைக்  கழிப்பவனை சமூகம் மதிப்பதும், எந்தப் பின்புலமும் இல்லாமல் தன் கையை ஊன்றி  சொந்தக் காலில் நிற்கப் போராடுபவனை இழிவாகப் பார்ப்பதும்  எந்த வகையில் நியாயம்...?

இதைத்தான்  கண்ணதாசன் மிக அழகாகக் கூறுவார் " அயோக்கியன் வெற்றி பெற்றால் அவன் செய்யும் முதல் வேலை யோக்கியனைக்  கேலி செய்வதே"   

இந்த நிலை மாறுமா...? மாறாதா...? என்பதை என்னால் கணிக்க இயலாது, ஆனால் மாற்றத்திற்கான ஒரே வழி நாம் அதை உணர்ந்து கொள்வதே என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும் . 

இனி நம் வாழ்க்கைப்  பயணத்தில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரையும் அது ஒரு ஆட்டோ ஓட்டுனரோ, வாயிற்காப்பாளரோ, தெருவில் காய்கறி விற்பவரையோ, உணவகத்தில் சாப்பாடு பறிமாருபவரோ, சக ஏழை நண்பனையோ, ஊழியரையோ... ! யாரையேனும், கர்வம் கொண்டு இழிவாகப் பார்க்கும் முன் ஒரு கனம் சிந்திப்போம்!!!

எனக்குக்  கிடைத்த வாய்ப்பு அவருக்கும் கிடைத்திருந்தால்...!!!




மாற்றம் தேவை 


Friday, October 10, 2014

பகையை வெல்லும் வழி?


 "பகையாளியை உறவாடிக் கெடு!” என்ற பழமொழியில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது; பகையாளியை உறவாடிக் கெடுத்துவிட முடியுமா?” இந்தக் கேள்வியை சத்குருவிடம் கேட்ட போது, பழமொழி சொல்லப்பட்ட காலகட்டத்தையும், அது இன்றைய சூழ்நிலையில் பொருந்துமா என்பதையும் விளக்குகிறார்.

சத்குரு: 




பல துறைகளில், இன்று போட்டியாளர்களை எதிரிகளாகப் பார்க்கும் அபத்தம் நேர்கிறது. போட்டியாளர் என்பவர் உங்கள் திறமையை முழுமையாக வெளிக் கொணர்வதற்கு உதவுபவர். உங்கள் குறைபாடுகள் என்ன என்பதை உங்களுக்கு உணர்த்த வல்லவர், போட்டியாளர். 

Monday, September 22, 2014

படக்கிறுக்கன் PHILOSOPHIES 2 : பில்லா 2


தமிழ்ச் சினிமாவில் புதிய முயற்சிகள் அத்திப்பூத்தாற்போல் நடந்து அதிலும் ஒரு சிலவைகள் மட்டுமே வெற்றி பெறுகின்றன.. கவனத்தை ஈர்க்கின்றன.. பாராட்டும் பெறுகின்றன.. அந்த வரிசையில் இந்தப் படமும் ஒன்று..!

பில்லா 2 என்பது 2012 இல் வெளிந்த ஒரு தமிழ்த் திரைப்படம். அஜீத் குமார்  நடிக்கும் இப்படத்தை சக்ரி இயக்கியிருக்கிறார் . ஒரு சாதாரண மனிதனான டேவிட் பில்லா என்பவர் எப்படி ஒரு Gangster ஆக  மாறினார் என்பதே இத்திரைப்படத்தின் கதை.

படத்திற்கு மிகபெரிய பலம் இரா. முருகனின் வசனங்களே ஓரிரு வரிகளில், போட்டி நிறைந்த உலகில் வாழ்வதற்குத்  தேவையான தத்துவார்த்த சிந்தனைகளை பளிச் பஞ்ச் வசனங்களில் தெரிவித்துள்ளார்.  அவை எதார்த்தத்தை பிரதிபலிக்கும் பலம் பொருந்திய வசனங்களாகவே  திரைப்படம் முழுவதும்  வருகின்றன 

பில்லா 2 வில் பல இடங்களில் பளிச் சிந்தனைகளைப் புதைத்திருக்கும்  வசனமே படத்தின் நாயகன்.

அவற்றில் என்னை அதிகம் சிந்திக்க வைத்த பல வசனங்களில் சிலவைகள்
மட்டும். 



Friday, September 12, 2014

பாலகுமாரனின் சிந்தனைகள் - பகுதி 1


எழுத்துக்களின் மூலம் என்னை செதுக்கி வாழ்க்கையை பற்றிய நிதர்சன புரிதலையும், தேடலையும் எனக்குள் விதைத்த எழுத்து சித்தர்  ஐயா பாலகுமாரன் அவர்களின்  சிந்தனைகளை  பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். 





மிகவும் உற்றுக் கவனித்தால் நமது தேவைகள் மூன்றாம் மனிதரின் பாராட்டுக்காக ஏற்பட்டவை.மற்றவர்கள் பொறாமையோடு பார்ப்பது நம்மில் பலருக்குப் பிடித்த விஷயம்.

----------------------------------------------

Saturday, August 9, 2014

அவமானம் தாங்கப் பழகு




மகத்தான எழுத்தாளரும், நமக்கு வாழ்கையை முறையானபடி வாழ கற்றுக் கொடுப்பவருமான எழுத்து சித்தர் பாலகுமாரனின் வெற்றி வேண்டுமெனில் என்னும் கட்டுரை தொகுப்பில் இருந்து  என்னைக்  கவர்ந்த தலைப்பில் இருந்து  சில வரிகளை, இதில் பகிர்ந்துள்ளேன். 




அவமானம் தாங்கப் பழகு 


"வாழ்க்கையில் உயர்வும் தாழ்வும் வெகு சகஜம். நல்லதொரு உயர்வின் மகிமையை அறிந்து கொள்ள தோல்வி என்கிற அனுபவத்தையும் பெறுவது நல்லது. வெற்றி என்றதும் பிறரால் அவமானப்படுத்துவது என்பதும் வரும். இது மிகப்பெரிய பாடங்களை நமக்கு சொல்லிக்கொடுத்துவிடும்.

அடுத்தவரின் உண்மையான முகம் நாம் அவமானப்படும்போது தெரியும்.

Sunday, July 27, 2014

The core of mans' spirit comes from new experiences

                                 

                                  "There is a pleasure in the pathless woods, 
                                  There is a rapture on the lonely shore, 
                                  There is society, where none intrudes, 
                                  By the deep sea, and music in its roar: 
                                  I love not man the less, but Nature more"
                                                                                     
                                                                                       - Lord byron

Films are special. They become part of you. They can change who you are. Have you ever watched travel movies, and while the credits were rolling up, thought to yourself. Movies are a great way to inspire, motivate and bring to light unique places in the world.

One of the movie that changed my life and made to experience how travelling can change a person. A must see and an obvious choice!

Into the wild (2007 American biographical drama  film)

It’s what most backpackers dream of doing one day, and although the guy took his travels to the extreme, it has inspired many people to let go and see the world in a new way.

If you want the feeling of leaving everything behind in search of proving to yourself that you can see the world, consider Into the Wild your #1 movie
This is the true story of Christopher McCandless (Emile Hirsch).

Freshly graduated from college with a promising future ahead, McCandless instead walked out of his privileged life and into the wild in search of adventure.

What happened to him on the way transformed this young wanderer into an enduring symbol for countless people — a fearless risk-taker who wrestled with the precarious balance between man and nature.

...............................................................................................................................................


The whole message of the movie ?



“ I think you really should make a radical change in your lifestyle and begin to boldly do things which you may previously never have thought of doing, or been too hesitant to attempt. 

So many people live within unhappy circumstances and yet will not take the initiative to change their situation because they are conditioned to a life of security, conformity, and conservatism, all of which may appear to give one peace of mind, but in reality nothing is more damaging to the adventurous spirit within a man than a secure future.

Saturday, July 5, 2014

If you die in this very moment what will die with you.. what dreams ?

You are the same today as you’ll be in five years, only two things can bring change in your life : "the people you meet and the books you read" - anonymous 
                                           
I find so much value in the books I read that I feel the need to share those lessons with you as well. The featured Book is "LAST LECTURE"




A brief Intro:

The Last Lecture was written by Randy Pausch, a former professor at Carnegie Mellon University. I say former because, unfortunately, Randy passed away in 2008 due to pancreatic cancer. The book is an adaptation of a lecture that Randy gave in 2007 entitled “Really Achieving Your Childhood Dreams”. Randy was asked to give his last lecture as part of Carnegie Mellon’s “Journeys” lecture series, which featured lectures where professors were asked “to consider their demise and to ruminate on what matters most to them”. The catch with Randy was that this would indeed be his last lecture, as he had been diagnosed with terminal cancer and agreeing to speak.

The real value of the book, is the fact that it is really important that a dying man’s instructional handbook on how to live your life by achieving your childhood dreams and following your passion.

I find this video conveys the same message what the Last lecture book gives. 

"If you die in this very moment what will die with you... what dreams ? what ideas? what talents? what greatness that hidden in you...? you can't get an another chance, there is only one life."


                 



                               

Some of the best lines from the book:


“The brick walls are there for a reason. The brick walls are not there to keep us out. The brick walls are there to give us a chance to show how badly we want something. Because the brick walls are there to stop the people who don’t want it badly enough. They’re there to stop the other people.”

Saturday, November 9, 2013

படக்கிறுக்கன் PHILOSOPHIES - 1



தமிழ்ச் சினிமாவில் புதிய முயற்சிகள் அத்திப்பூத்தாற்போல் நடந்து அதிலும் ஒரு சிலவைகள் மட்டுமே வெற்றி பெறுகின்றன.. கவனத்தை ஈர்க்கின்றன.. பாராட்டும் பெறுகின்றன.. அந்த வரிசையில் இந்தப் படமும் ஒன்று..!

தமிழ் ரசனையை ஒருபடி உயர்த்தக்கூடிய இந்தப் படத்தை நீங்கள் தவறவிட்டால் உங்கள் வாழ்க்கையில் முக்கியமான ஒன்றை தவறவிடுகிறீர்கள் என்று அர்த்தம்!

'மூடர் கூடம்' பல இடங்களில் பளிச் சிந்தனைகளைப் புதைத்திருக்கும் நவீனின் வசனமே படத்தின் நாயகன்!

அவற்றில் என்னை அதிகம் சிந்திக்க வைத்த பல வசனங்களில் சிலவைகள்
மட்டும்.