Showing posts with label மற்றவை. Show all posts
Showing posts with label மற்றவை. Show all posts

Wednesday, June 3, 2015

இது ஜெயமோகனின் 'அறம்'



'அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்' என்று தவறு செய்யும் ஆட்சியாளர்களை கொன்று போடும் வல்லமை உடையது 'அறம்' என்று சிலப்பதிகாரத்தில் போற்றப்படுகிறது. திருவள்ளுவர் முப்பால்களில் முதல் பாலாக அறத்துப் பாலை வைத்தார். அறம் பாடுவது தமிழ் புலவர்களின் வலிமையான ஆயுதமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. அறிவை இழிவு படுத்தும் எவரையும் அறம் பாடி ஒழிக்கும் வல்லமையை தமிழ்ப் புலவர்கள் காலந்தோறும் கைகளில் வைத்திருந்தார்கள்.

இப்படிப்பட்ட அறத்தை ஒவ்வொரு கால கட்டத்திலும் இலக்கிய மேதைகள் அடையாளம் கண்டு சமூகத்துக்கு அறியத் தருகிறார்கள். அந்த வரிசையில் சில ஆண்டுகளுக்கு முன்பு சமகால இலக்கிய ஆளுமையான ஜெயமோகன், தன் வலைதளத்தில் 2011 ஜனவரியில் ‘அறம்’ என்ற சிறுகதையில் தொடங்கி வரிசையாக ஒரு ஒன்றரை மாதத்துக்குள் 12 (‘மெல்லிய நூல்’ என்ற சிறுகதையையும் சேர்த்தால் 13) சிறுகதைகளை எழுதி வெளியிட்டார்.

Monday, September 22, 2014

படக்கிறுக்கன் PHILOSOPHIES 2 : பில்லா 2


தமிழ்ச் சினிமாவில் புதிய முயற்சிகள் அத்திப்பூத்தாற்போல் நடந்து அதிலும் ஒரு சிலவைகள் மட்டுமே வெற்றி பெறுகின்றன.. கவனத்தை ஈர்க்கின்றன.. பாராட்டும் பெறுகின்றன.. அந்த வரிசையில் இந்தப் படமும் ஒன்று..!

பில்லா 2 என்பது 2012 இல் வெளிந்த ஒரு தமிழ்த் திரைப்படம். அஜீத் குமார்  நடிக்கும் இப்படத்தை சக்ரி இயக்கியிருக்கிறார் . ஒரு சாதாரண மனிதனான டேவிட் பில்லா என்பவர் எப்படி ஒரு Gangster ஆக  மாறினார் என்பதே இத்திரைப்படத்தின் கதை.

படத்திற்கு மிகபெரிய பலம் இரா. முருகனின் வசனங்களே ஓரிரு வரிகளில், போட்டி நிறைந்த உலகில் வாழ்வதற்குத்  தேவையான தத்துவார்த்த சிந்தனைகளை பளிச் பஞ்ச் வசனங்களில் தெரிவித்துள்ளார்.  அவை எதார்த்தத்தை பிரதிபலிக்கும் பலம் பொருந்திய வசனங்களாகவே  திரைப்படம் முழுவதும்  வருகின்றன 

பில்லா 2 வில் பல இடங்களில் பளிச் சிந்தனைகளைப் புதைத்திருக்கும்  வசனமே படத்தின் நாயகன்.

அவற்றில் என்னை அதிகம் சிந்திக்க வைத்த பல வசனங்களில் சிலவைகள்
மட்டும். 



Sunday, July 27, 2014

The core of mans' spirit comes from new experiences

                                 

                                  "There is a pleasure in the pathless woods, 
                                  There is a rapture on the lonely shore, 
                                  There is society, where none intrudes, 
                                  By the deep sea, and music in its roar: 
                                  I love not man the less, but Nature more"
                                                                                     
                                                                                       - Lord byron

Films are special. They become part of you. They can change who you are. Have you ever watched travel movies, and while the credits were rolling up, thought to yourself. Movies are a great way to inspire, motivate and bring to light unique places in the world.

One of the movie that changed my life and made to experience how travelling can change a person. A must see and an obvious choice!

Into the wild (2007 American biographical drama  film)

It’s what most backpackers dream of doing one day, and although the guy took his travels to the extreme, it has inspired many people to let go and see the world in a new way.

If you want the feeling of leaving everything behind in search of proving to yourself that you can see the world, consider Into the Wild your #1 movie
This is the true story of Christopher McCandless (Emile Hirsch).

Freshly graduated from college with a promising future ahead, McCandless instead walked out of his privileged life and into the wild in search of adventure.

What happened to him on the way transformed this young wanderer into an enduring symbol for countless people — a fearless risk-taker who wrestled with the precarious balance between man and nature.

...............................................................................................................................................


The whole message of the movie ?



“ I think you really should make a radical change in your lifestyle and begin to boldly do things which you may previously never have thought of doing, or been too hesitant to attempt. 

So many people live within unhappy circumstances and yet will not take the initiative to change their situation because they are conditioned to a life of security, conformity, and conservatism, all of which may appear to give one peace of mind, but in reality nothing is more damaging to the adventurous spirit within a man than a secure future.

Saturday, July 20, 2013

How winning is done!



Rocky Balboa’s Inspirational Speech To His Son






[Son]

I know that’s not what I wanna do, but that’s just the way that it is. Don’t you care what people think? Doesn’t bother you that people…are making you out to be joke and that I’ll be included in that? Do you think that’s right? Do you?

[Father] 

You ain’t gonna believe this, but you used to fit right here.

I’d hold you up to say to your mother, “This kid’s gonna be the best kid in the world. This kid’s gonna be somebody better than anybody I ever knew.” 

And you grew up good and wonderful. It was great just watching you, every day was like a privilege. Then the time come for you to be your own man and take on the world, and you did. But somewhere along the line, you changed. 

You stopped being you. You let people stick a finger in your face and tell you you’re no good. And when things got hard, you started looking for something to blame, like a big shadow.

Let me tell you something you already know. 

The world ain’t all sunshine and rainbows. It’s a very mean and nasty place and I don’t care how tough you are it will beat you to your knees and keep you there permanently if you let it. You, me, or nobody is gonna hit as hard as life. But it ain’t about how hard ya hit. It’s about how hard you can get hit and keep moving forward. How much you can take and keep moving forward. That’s how winning is done! 

Now if you know what you’re worth then go out and get what you’re worth. But you gotta be willing to take the hits, and not pointing fingers saying you ain’t what you wanna be because of him, or her, or anybody! 

Cowards do that and that ain’t you! You’re better than that!

I’m always gonna love you no matter what. No matter what happens. You’re my son and you’re my blood. You’re the best thing in my life. 

But until you start believing in yourself, you are not gonna have a life. 



Saturday, April 20, 2013

LAWS OF LIFE



Oftentimes letting go has nothing to do with weakness, and everything to do with strength. We let go and walk away not because we want the universe to realize our worth, but because we finally realize our own worth.

And that’s what this all about – realizing your worth, and harnessing this realization to identify yourself. 




1. The past can steal your present if you let it. 

You can spend hours, days, weeks, months, or even years sitting alone in a dark room, over-analyzing a situation from the past, trying to put the pieces together, justifying what could’ve or should’ve happened. Or you can just leave the pieces on the floor and walk out the front door into the sunlight to get some fresh air.

2. Not everyone, and not everything, is meant to stay. 

There are things you don’t want to happen, but have to accept, things you don’t want to know, but have to learn, and people you can’t live without but have to let go. Some circumstances and people come into your life just to strengthen you, so you can move on without them.

3. Happiness is not the absence of problems, but the ability to deal with them

Imagine all the wondrous things your mind might embrace if it weren’t wrapped so tightly around your struggles. Always look at what you have, instead of what you have lost. Because it’s not what the world takes away from you that counts; it’s what you do with what you have left.

4. Sometimes you just need to do your best and surrender the rest. 

Don’t be too hard on yourself. There are plenty of people willing to do that for you. Tell yourself, “I am doing the best I can with what I have in this moment. And that is all I can expect of anyone, including me.” Love yourself and be proud of everything that you do, even your mistakes. Because even mistakes mean you’re trying.

5. You are in control of one person, and one person only: yourself.

There is only one way to happiness, and that is to cease worrying about things which are beyond the power of your control. Letting go in your relationships doesn’t always mean that you don’t care about people anymore; it’s simply realizing that the only person you really have control over is yourself.

6. What’s right for you may be wrong for others, and vice versa.

Think for yourself, and allow others the privilege of doing so too. We all dance to the beat of a different drum. There are few absolute ‘rights’ and ‘wrongs’ in the world. You need to live your life your way – the way that’s right for you. Read The Road Less Travelled .

7. Some people will refuse to accept you for who you are. 

Always choose to be true to yourself, even at the risk of incurring ridicule from others, rather than being fake and incurring the pain and confusion of trying to be someone you’re not. When you are comfortable in your skin, not everyone in this world will like you, and that’s okay. You could be the ripest, juiciest apple in the world, and there’s going to be someone out there who hates apples.

8. Relationships can only exist on a steady foundation of truth.

When there is breakdown in a relationship, you must have the hard conversation. It may not be pretty and it may not feel good. But if you are willing to listen and tell the truth, it will open up. When you build relationships based on truth and authenticity, rather than masks, false perfection, and being phony, your relationships will heal, connect, and thrive.

9. Change your thoughts and the world around you changes.

Practice really seeing whatever it is you’re looking at. You are today where your thoughts and perceptions have brought you; you will be tomorrow where your thoughts and perceptions take you. If you truly want to change your life, you must first change your mind. The world around you changes when you change.

10. You can make decisions, or you can make excuses.

Life is a continuous exercise in creative problem solving mind. A mistake doesn’t become a failure until you refuse to correct it. Thus, most long-term failures are the outcome of people who make excuses instead of decisions.

11. It usually takes just a few negative remarks to kill a person’s dream.

Don’t kill people’s dreams with negative words, and don’t put up with those who do. Don’t let people interrupt you and tell you that you can’t do something. If you have a dream that you’re passionate about, you must protect it. When others can’t do something themselves, they’re going to tell you that you can’t do it either; and that’s a lie. These people are simply speaking from within the boundaries of their own limitations.

12. Sometimes walking away is the only way to win. 

Never waste your time trying to explain yourself to people who have proven that they are committed to misunderstanding you. don’t define your intelligence by the number of arguments you have won, but by the number of times you have said, “This needless nonsense is not worth my time.”



LIFE IS WHAT YOU MAKE IT



Saturday, March 2, 2013

BACKSTABBING - "YOU TOO BRUTUS"




Backstabbing friends are a part of life, and the act itself happens to nearly everyone at some point in life. The betrayal of a trusted friend or colleague inflicts pain and hurt.

People who backstab tend to be "insecure, vindictive, revengeful, deceitful, conniving, resentful, and angry.” 

Behaving like your best friend with smiles, a helpful attitude, and promises of loyalty and trustworthiness, the backstabber waits for the right moment and then turns on you with a vengeance. From stealing projects at work to stealing friends, the backstabber’s ways are manipulative as she uses low-ball tactics that make you appear to be a liar, a thief or someone not to be trusted.

Why People Backstab


Reasons why people backstab others range from cowardice to a need for power. The sole purpose of backstabbing is gaining the upper hand and garnering power


One of the most famous examples of backstabbing comes from ancient Rome where Julius Caesar was stabbed 23 times by members of the Senate and his friend, Marcus Junius Brutus. As the blows fell from Brutus’ dagger, Caesar’s last words, “You too Brutus?” underscore the disbelief he had that a friend could backstab him.


Backstabbing at Work






It is far easier to understand why co-workers or colleagues revert to backstabbing antics rather than a friend. Colleagues wish to gain notice from superiors and put themselves in position for advancement. Backstabbing in the office is a scheme to make you look bad and the backstabber appear better. Lies and deception are the tools of a backstabbing coworker on a mission to prove how inept you are at your job.

There are many ways people backstab others at work. After completing a group project, one person may complain to a superior about how difficult it was to work with the group and that so-and-so lacked focus. By criticizing other people, the backstabber feels better about herself. Backstabbing may be nothing more than idle gossip about you to other co-workers. Using every occasion to bring attention to your faults or weaknesses is a mean-spirited tactic. Offering to complete a project or task assigned to another coworker is one such tactic. Although it makes the backstabber look good temporarily, in the long run, the backstabber will lose the confidence of her peers.


How to Deal With Backstabbing

Learning how to deal with backstabbing is important in order to move on. Dealing with a backstabber at work requires a different strategy than dealing with manipulative friends.

Backstabbers at work 

As soon as you realize that a coworker is backstabbing you, think carefully before you act. Choose which battles to fight, keeping in mind that you do not want to revert to the same behind-the-back tactics.

* Find evidence of the backstabbing. Perhaps a friend in the office will vouch for you.


* Prove false accusations wrong. Record projects with dates and times to prove that they are indeed yours.

* Finally, confront the backstabber and be prepared to back up every point you make with evidence.

* Another way to deal with backstabbers is to beat them at their own game without actually backstabbing. Instead of confronting your nemesis, turn her into your best friend. The saying, “Keep your friends close and your enemies closer” rings true in this case.

* A group of coworkers who admire your work and respect you will go a long way toward safe-guarding your reputation.

* Work harder than ever before. Make every deadline, dot every “I” and cross every “T” leaving no error or room for mistakes and misunderstandings. Go above and beyond the call of duty. Come in early and stay late. Prove your worth to the company, pulling the legs right from under a backstabber.

* In a soft tone of voice alert the backstabber to the fact that you know what’s going on. Do not allow yourself to be pulled into an argument. Listen to what he says and then leave the situation alone. The fact that you know what’s up may be enough to stop the backstabbing.

* Remember how the tip of a virtual knife feels and stand up for others at work or in your circle of friends that may be experiencing the slash of a backstabber.

* Do not offer too much information too soon. Keep your private life private at work and when meeting new people.

* Finally, do not resort to the very tactics used on you. No matter how appealing revenge looks, lowering yourself to the level of low-ball tactics puts you in the same league as the backstabber.

If all else fails, ask for a transfer to another department, a different location, or seek employment elsewhere.

No one wants to feel the betrayal of backstabbing best friends or colleagues. It does happen and when it does make certain that you are prepared to deal with the backstabber in an appropriate manner. For friends it may come down to cutting them out of your life. You will not have that option in the workplace. Finding ways to live with the backstabber or remove yourself from the situation. 

A good quote to live by comes from Renaissance clergyman and poet George Herbert, 

“Living well is the best revenge". 



"ஒரு கண்ணில் தூங்கிடு 
  மறு கண்ணை திறந்திடு 
  ஓய்வாக படுப்பது 
  அது கல்லறையில் கிடைப்பது 


  எங்கேயும் வருகிறான் 
  எமனாகத் தொடர்கிறான் 
  முகம் மாற்றி அலைகிறான் 
  என் கண்கள் பார்த்தால் மறைகிறான் 


  அவன் முந்துவானா  இல்லை நான் முந்துவேனா ....?"

                                                                      - நா.முத்துக்குமார் 



Thursday, February 21, 2013

DONT GIVE UP


                                    


I HAVEN'T POSTED ANY CONTENT THAT WILL GIVE A PAGE LECTURE AND THOUGHTS ABOUT THIS PARTICULAR HEADING.

I THOUGHT THIS VIDEO WILL BE MORE THAN ENOUGH. 

I CAN CHALLENGE YOU, THIS VIDEO WILL DEFINITELY DO SOMETHING.




THANK YOU


Monday, January 28, 2013

Attitude is Altitude




Imagine being born without arms. No arms to wrap around a friend ; no hands to hold the ones you love; no fingers to experience touch ; no way to lift or carry things. How much more difficult would life be if you were living without arms and hands? Or what about legs? Imagine if instead of no arms, you had no legs. No ability to dance, walk, run, or even stand. Now put both of those scenarios together… no arms and no legs. What would you do? How would that affect your everyday life?
Nick Vujicic was born with no arms and no legs – but he didn’t let this stop him.
The 26-year-old, who is practically only torso enjoys playing golf and football, he swims and surfs despite having no limbs. He has a small foot on his left hip, which helps him gain balance, write, type and pick up things between his toes (something that, if we think about it, most of us also do!).
Nick also had a special wheelchair and a team of people that would care for him. Due to the pressure that was put on him by peers and people around, at the age of 8, he was deeply depressed and told his mother that he wanted to die. But with the help of his family and friends, Nick managed to overcome his fears and depression and has become a motivational speaker, travelling to over 24 countries speaking to groups of up to 110.000 people.
Nick Vujicic is the living proof that no one should be discouraged by the difficulties that show up during life, no matter how big they might be. Although at the beginning even he had to face his own discouragement and the prejudice of people around, this sometimes bringing him to the verge of suicide, even at the frail age of 10, Nick managed to overcome everything and succeed in many domains- becoming a role model for everyone.


                                     


Quotes and Sayings:
“Along the way you might fall down, . .. sometimes in life, you might fall down and can’t find the strength to get back up… do you think you have hope? Because I tell you, I’m down here and I have no arms and no legs, … It should be impossible for me to get up, but it’s not”
“As long as I try, there’s always a chance of getting up. It’s not the end until you give up.” 
“I don’t care if you are a good mathematician, or a good athletic, or not good at anything- that you think. But I’m gonna come and tell you that you’re awesome the way you are.”
“I love my life, because I’ve seen my purpose”
“I may not have hands to hold my wife’s hands, but I don’t need hands to hold her heart. That’s what I’m gonna hold”
“I have the choice to be angry in God for what I don’t have or be thankful for what you do have."
“There’s no point in being complete on the outside when you’re broken in the inside.”
“I will try one hundred times to get up, and if I fail one hundred times. If I fail and I give up, will I ever get up? No! If I fail I’ll try again, and again and again. But I want to tell you it’s not the end.”
“Everybody loves winning, but we should not linger on the difference between winning and losing…But Is losing failing?”
“Failure is not important, how you overcome it is more important.”
“I am gonna try again and again, because the moment I give up, is the moment I fail.”
"I never met a bitter person who was thankful. Or a thankful person who was bitter."
"It's a lie to think you're not good enough. It's a lie to think you're not worth anything." 




Wednesday, January 9, 2013

என்னமோ கற்பு, கற்பு என்று கதைக்கிறீர்களே!






பொன்னகரம்               

- புதுமைப்பித்தன் 
பொன்னகரத்தைப் பற்றிக் கேட்டிருக்கிறீர்களா? நமது பௌராணிகர்களின் கனவைப் போல் அங்கு ஒன்றுமில்லை. பூர்வ புண்ணியம் என்று சொல்லுகிறார்களே, அந்தத் தத்துவத்தைக் கொண்டு, நியாயம் என்று சமாதனப்பட வேண்டிய விதிதான். ஒரு சில 'மகாராஜர்களுக்காக' இம்மையின் பயனைத் தேடிக்கொடுக்கக் கடமைப்பட்டு வசிக்கும் மனிதத் தேனீக்களுக்கு உண்மையில் ஒரு பொன் நகரந்தான் அது.

ரயில்வே தண்டவாளத்தின் பக்கமாக, சாராய டிப்போவுக்குப் போகிறதே ஒரு சந்து, அது தான் அங்கு 'மெயின்' ராஸ்தா. கைகோர்த்த நான்கு பேர் வரிசை தாராளமாகப் போகலாம். எதிரே வண்டிகள் வராவிட்டால், இதற்குக் கிளையாக                                          உள் வளைவுகள் உண்டு. முயல் வளைகள் போல்.

இந்தத் திவ்வியப் பிரதேசத்தைத் தரிசிக்க வேண்டுமானால்... சிறு தூறலாக மழை சிணுசிணுத்துக் கொண்டிருக்கும் பொழுது சென்றால்தான் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். வழி நெடுகச் சேற்றுக் குழம்புகள். சாலையோரமாக 'முனிசிபல் கங்கை' - அல்ல, யமுனைதானே கறுப்பாக இருக்கும்? - அதுதான். பிறகு ஓர் இரும்பு வேலி, அதற்குச் சற்று உயரத் தள்ளி அந்த ரயில்வே தண்டவாளம்.

மறுபக்கம், வரிசையாக மனிதக் கூடுகள் - ஆமாம், வசிப்பதற்குத்தான்!

தண்ணீர்க் குழாய்கள்? இருக்கின்றன. மின்சார விளக்கு? ஞாபகமில்லை - சாதாரண எண்ணெய் விளக்கு, அதாவது சந்திரன் இல்லாத காலங்களில் (கிருஷ்ண பட்சத்தில்) ஏற்றி வைத்தால் போதாதா?

பொன்னகரத்துக் குழந்தைகளுக்கு 'மீன் பிடித்து' விளையாடுவதில் வெகு பிரியம். அந்த முனிசிபல் தீர்த்தத்தில், மீன் ஏது? எங்கிருந்த பணக்கார வீடுகளிலிருந்தோ, சில சமயம் அழுகிய பழம், ஊசிய வடை, இத்யாதி உருண்டு வரும். அது அந்த ஊர்க் குழந்தைகளின் ரகசியம்.

ரயில்வே தண்டவாளத்தின் பக்கத்தில் விளையாடுவதில் என்ன ஆனந்தமோ? வேலி இருக்கத்தான் செய்கிறது. போகக் கூடாது என்ற சட்டம் குழந்தைகளுக்குத் தெரியுமா? 'போனால்' பெற்றோருக்குத் தான் கொஞ்சம் பாரம் ஒழிந்ததே! குழந்தைகள் தான் என்ன, 'கிளாக்ஸோ' 'மெல்லின்ஸ் பூட்' குழந்தைகளா, கம்பி இடையில் போக முடியாமலிருக்க? புகைந்தோடும் அந்த இரும்பு நாகரிகத்திற்கு, வரிசையாக நின்று "குட்மார்னிங் சார்!" என்று கத்துவதில் ரொம்ப ஆனந்தம் அவர்களுக்கு. அதுதான் அவர்களுக்குக் கிடைக்கும் ஆரம்ப ஆங்கிலக் கல்வி.

ஐந்து மணிக்கு அப்புறந்தான் ஊர் கலகலவென்று உயிர் பெற்று இருக்கும். அப்பொழுதிருந்து தான் அவ்வூர்ப் பெண்கள் தங்கள் வேலையைச் செய்வார்கள். சாராய வண்டிகள், தண்ணீர் எடுக்கவரும் பெண்கள்! அங்கு தண்ணீர் எடுப்பது என்றால் ஒரு பாரதப் போர்.

இள வயதில் நரைத்தது போல் பஞ்சு படிந்த தலை, மாசடைந்த கண்கள் - விடிய விடிய மின்சார 'ஸ்பின்டிலை'ப் (கதிர்) பார்த்துக் கொண்டு இருந்தால், பிறகு கண் என்னமாக இருக்கும்? கண்கள்தாம் என்ன இரும்பா? உழைப்பின் ஆரோக்கியத்தால் ஏற்பட்ட கட்டமைந்த அழகு. ஆரோக்கியமா? அது எங்கிருந்து வந்தது? பாக்டீரியா, விஷக் கிருமிகள், காலரா இத்யாதி அங்கிருந்துதானே உற்பத்தி செய்யப் படுகின்றன! எப்படியாவது உயிர் வாழ வேண்டும் என்று ஆசையிருந்தால் எல்லாம் நடக்கும். பழைய கற்காலத்து மனிதன், புலி சிங்கங்களுடன் குகையில் வாழ்ந்து வந்தான்; அவைகளும் அவனைக் கொன்றன; அவனும் அவைகளைக் கொன்றான். அதற்காக வலிமையற்று, வம்சத்தை விருத்திசெய்யாமல் செத்தொழிந்தா போனான்? வாழ்க்கையே ஒரு பெரிய வேட்டை, அதற்கென்ன?

கழுத்தில் ஒரு கருப்புக் கயிறு - வாழ்க்கைத் தொழுவின் அறிகுறி. அதைப் பற்றி அங்கு அதிகக் கவலையில்லை. அது வேறு உலகம் ஐயா, அதன் தர்மங்களும் வேறு.

அம்மாளு ஒரு மில் கூலி. வயது இருபது அல்லது இருபத்திரண்டிற்கு மேல் போகாது. புருஷன் 'ஜட்கா' வைத்திருக்கிறான்; சொந்த வண்டிதான். அம்மாளு, முருகேசன் (அவள் புருஷன்), அவன் தாயார், தம்பி, முருகேசன் குதிரை - ஆக நபர் ஐந்து சேர்ந்தது அவர்கள் குடும்பம். இருவருடைய வரும்படியில்தான், இவர்கள் சாப்பாடு - (குதிரை உள்பட), வீட்டு வாடகை, போலீஸ் 'மாமூல்', முருகேசன் தம்பி திருட்டுத் தனமாகக் கஞ்சா அடிக்கக் காசு - எல்லாம் இதற்குள் தான். எல்லாரும் ஏகதேசக் குடியர்கள் தான். 'டல் ஸீஸ'னில் பசியை மறக்க வேறு வழி? பசி, ஐயா, பசி! 'பத்தும் பசி வந்திடப் பறந்துபோம்' என்று வெகு ஒய்யாரமாக, உடம்பில் பிடிக்காமல் பாடுகிறீரே, அங்கு நீர் ஒரு நாள் இருந்தால் உமக்கு அடிவயிற்றிலிருந்து வரும் அதன் அர்த்தம்!


அன்றைக்கு முருகேசனுக்குக் குஷி, அவனும், அவன் குதிரையும் 'தண்ணி போட்டு' விட்டு ரேஸ் விட்டார்கள். வண்டி 'டோ க்கர்' அடித்தது. ஏர்க்கால் ஒடிந்தது. குதிரைக்கு பலமான காயம். முருகேசனுக்கு ஊமையடி. வீட்டில் கொண்டுவந்து போடும்பொழுது பேச்சு மூச்சில்லை. நல்ல காலம் குடித்திருந்தான், இந்த மாதிரி வலி தெரியாமலாவது கிடக்க. வீக்கத்திற்கு என்னத்தையோ அரைத்துப் பூசினாள் அம்மாளு. அப்பொழுதுதான் சற்று பேசினான். அவனுக்குப் பால் கஞ்சி வேண்டுமாம்! அம்மாளுவுக்குக் கூலிபோட இன்னும் இரண்டு நாள் இருக்கிறது. வீட்டில் காசேது?

அம்மாளு தண்ணீர் எடுக்க வருகிறாள்.

'கும்'மிருட்டு பஞ்சாங்கத்தின்படி இன்றைக்குச் சந்திரன் வரவேண்டும். ஆனால் அது மேகத்தில் மறைந்து கொண்டால் முனிசிபாலிடி என்ன செய்ய முடியும்?

எப்பொழுதும்போல் இரைச்சல்தான். ஒருவாறு தண்ணீர் பிடித்தாய்விட்டது. திரும்பி வருகிறாள்.

சந்தின் பக்கத்தில் ஒருவன் - அம்மாளுவின் மேல் ரொம்ப நாளாகக் 'கண்' வைத்திருந்தவன்.

இருவரும் இருளில் மறைகிறார்கள். அம்மாளு முக்கால் ரூபாய் சம்பாதித்து விட்டாள். ஆம், புருஷனுக்குப் பால் கஞ்சி வார்க்கத்தான்!

என்னமோ கற்பு, கற்பு என்று கதைக்கிறீர்களே! இதுதான் ஐயா, பொன்னகரம்!

மணிக்கொடி, 6-5-1934


Sunday, December 23, 2012

கோபம்


அதிகாரம் -வெகுளாமை 


குறள் 301:

செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்கா.

சாலமன் பாப்பையா உரை:
எங்கே தன் கோபம் பலிக்குமோ அங்கே கோபம் கொள்ளாதவனே உண்மையாகவே கோபம் கொள்ளாதவன்; பலிக்காத இடத்தில் கோபத்தைத் தடுத்து என்ன? தடுக்காமல் விட்டுத்தான் என்ன?.

குறள் 302:

செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற.

சாலமன் பாப்பையா உரை:
பலிக்காத இடத்தில் கோபம் கொள்வது நமக்கே தீமை; பலிக்கும் இடத்தில் கோபம் கொண்டாலும் அதை விடத் தீமை வேறு இல்லை.

குறள் 303:

மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும்.

சாலமன் பாப்பையா உரை:
தீமை வருவது எல்லாம் கோபத்தால்தான்; அதனால் எவரிடமானாலும் சரி, கோபம் கொள்வதை விட்டுவிடுக.

குறள் 304:

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற.

சாலமன் பாப்பையா உரை:
முகத்தில் சிரிப்பையும், மனத்துள் மகிழ்ச்சியையும் கொன்றுவிடும் கோபத்தை விட வேறு பகையும் உண்டோ?.

குறள் 305:

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்.

சாலமன் பாப்பையா உரை:
தனக்குத் துன்பம் வராமல் காக்க விரும்பினால் கோபம் கொள்ளாமல் காக்கவும், காக்க முடியாது போனால் உடையவரையே சினம் கொல்லும்.

குறள் 306:

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்.

சாலமன் பாப்பையா உரை:
சேர்ந்தவரைக் கொல்லி எனப்படும் கோபம், சேர்ந்தவரை மட்டும் அன்று; சேர்ந்தவர்க்குத் துணையாக இருப்பவரையும் எரித்துவிடும்.

குறள் 307:

சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.

சாலமன் பாப்பையா உரை:
நிலத்தில் அடித்தவன் கை, வேதனையில் இருந்து தப்ப முடியாதது போலக், கோபத்தைக் குணமாகக் கொண்டவனும் வேதனை அனுபவத்திலிருந்து தப்ப முடியாது.

குறள் 308:

இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று.

சாலமன் பாப்பையா உரை:
பல சுடரை உடைய பெருநெருப்பு நம் மீது பட்டது போன்ற தீமையை ஒருவன் நமக்குச் செய்தாலும், நம்மால் கோபம் கொள்ளாதிருக்க முடியுமானால் அது நம் உடலுக்கும் நல்லது.

குறள் 309:

உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்.

சாலமன் பாப்பையா உரை:
உள்ளத்துள் கோபம் கொள்ள ஒருபோதும் எண்ணாதவன், தான் நினைத்ததை எல்லாம் உடனே அடைவான்.

குறள் 310:

இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை.

சாலமன் பாப்பையா உரை:
பெருங்கோபம் கொண்டவர் இருந்தாலும் இறந்தவரைப் போன்றவரே; கோபத்தை விட்டுவிட்டவர். இறக்க வேண்டியவரே என்றாலும் சாவைத் தவிர்த்தவர் போன்றவரே.